தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 10, 2020, 11:55 PM IST

ETV Bharat / state

'மக்கள் செல்லாத மாவட்ட ஆட்சியர் அலுவலகப் பூங்கா...'

நாமக்கல்: பராமரிப்பு இல்லாமல் மூடப்பட்ட பல பூங்காக்கள் நாம் அறிந்ததுண்டு. ஆனால் திறந்த நிலையிலும் மக்கள் செல்ல ஐயம் கொள்ளும் ஒரு பூங்கா உண்டென்றால் அது நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பூங்காவாகும்.

மக்கள் செல்லாத பூங்கா மாவட்ட ஆட்சியர் அலுவலகப் பூங்கா
மக்கள் செல்லாத பூங்கா மாவட்ட ஆட்சியர் அலுவலகப் பூங்கா

இறுக்கமான சூழல் கொண்ட இந்த காலத்தில் மக்கள் தங்களின் மனதினை லேசாக வைத்துக்கொள்ள பூங்காக்கள் போன்றவைகள் அமைக்கப்படுகின்றன. மேலும் அரசு அலுவலகங்களில் அமைந்திருக்கும் பூங்காக்களினால் மக்களுக்கு பாதுகாப்பு இன்னும் அதிகமாகிறது. பராமரிப்பு இல்லாமல் மூடப்பட்ட பல பூங்காக்கள் நாம் அறிந்ததுண்டு. ஆனால் திறந்த நிலையிலும் மக்கள் செல்ல ஐயம் கொள்ளும் ஒரு பூங்கா உண்டென்றால், அது நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பூங்காவாகும்.

பராமரிப்பு இல்லா பூங்கா

நாமக்கல் - திருச்செங்கோடு சாலையில் அமைந்துள்ள நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பல்வேறு துறை சார்ந்த மாவட்ட அலுவலகங்கள், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், வட்டாரப் போக்குவரத்துத்துறை அலுவலகம் உட்பட பல அரசு அலுவலகங்கள் உள்ளன. அங்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.

பராமரிப்பு இல்லா பூங்கா

இந்த அலுவலகத்தில் மக்களின் பயன்பாட்டிற்காக ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்தபோது, ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தின் இருபுறமும் அரசுப் பூங்கா அமைக்கப்பட்டது. இந்த சிறுவர்கள் பூங்காவில் சிறுவர்கள் விளையாட ஏதுவாக ஊஞ்சல்கள், விலங்குகளின் சிலைகள், சறுக்கல்கள் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளன. அவை மட்டுமின்றி சிறுவர்களின் அறிவை வளர்த்துக் கொள்ள நாமக்கல் மண்ணிற்கு பெருமை சேர்த்த நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளையின் திருவுருவச்சிலை, இராமலிங்கம் பிள்ளையின் வாழ்க்கை வரலாறு அடங்கிய தகவல் பலகை, தமிழ்த்தாய் சிலை, நாமக்கல் மாவட்டத்தின் அடையாளமாகத் திகழும் மலைக்கோட்டையின் உருவ மாதிரி ஆகியவையும் முதியவர்கள் மற்றும் பெண்கள் அமர்ந்து, ஓய்வெடுக்க நேர்த்தியாக செய்யப்பட்ட சாய்வு நாற்காலிகளும் உள்ளன.

மக்கள் செல்லாத பூங்கா

இந்நிலையில் இந்தப் பூங்கா கடந்த சில ஆண்டுகளாகப் பராமரிப்பின்றி கைவிடப்பட்ட நிலையில் சிலைகள் மற்றும் விளையாட்டு சாதனங்கள் உடைந்தும்; பூங்காவின் அழகிய தோற்றம் சீரழிந்து முட்புதர்கள், குப்பைகள், பிளாஸ்டிக் தண்ணீர் குடுவைகளாக காட்சியளிக்கின்றன. இந்தச் சுகாதார சீர்கேட்டால் விஷவண்டுகள், பூச்சிகள், பாம்புகள் இருக்கும் எனும் அச்சத்தால், பூங்கா திறந்திருந்தும் பொதுமக்கள் உள்ளே செல்லாமல் வெளியிலேயே காத்துக்கிடக்கும் அவலநிலை உருவாகியுள்ளது. மேலும் வாரந்தோறும் திங்கட்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டம் என்பதால், ஆட்சியர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் ஓய்வெடுக்க முடியாமல் அவதியுறும் நிலை உள்ளது.

மேலும் கடந்த குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருபது மரங்களை பாதுகாத்து பராமரித்ததற்கு மாவட்ட செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை அதிகாரிக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கிய மாவட்ட ஆட்சியர், இந்த விவகாரத்திலும் உடனடியாக தலையிட்டுத் தீர்வு காண வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

இதையும் படிங்க:மதம், சாதிகளை துறந்து மனிதர்களாக சங்கமிக்க ஓர் மதம்

ABOUT THE AUTHOR

...view details