தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 25, 2020, 8:58 PM IST

ETV Bharat / state

நாமக்கல்லில் கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரம்

நாமக்கல்: வீடுகள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவைகளுக்கு கிருமிநாசினி மருந்து தெளிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள வேளையில், நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் வீடுகள், வணிக வளாகங்கள், ஏடிஎம் நிலையங்களுக்கு கிருமிநாசினி மருந்து தெளிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், அத்தியாவசிய தேவைகளுக்காக வீட்டைவிட்டு வெளியே செல்பவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மருந்தகம், மளிகை கடைகளில் ஒருவருக்கொருவர் இடைவெளிவிட்டு நிற்க வேண்டும் எனவும் காவல் துறையினரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரம்

கரோனா வைரஸ் பாதிப்பு குறித்து போதுமான விழிப்புணர்வின்றி பொதுமக்கள் ஆங்காங்கே அலட்சியமாக சுற்றிவருவது வேதனை அளிப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: தொடர் மருத்துவக் கண்காணிப்பில் வெளிநாடுகளிலிருந்து சொந்த ஊர் திரும்பிய 70 பேர்

ABOUT THE AUTHOR

...view details