தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 29, 2019, 11:36 PM IST

ETV Bharat / state

லாரி மீது கார் மோதல்: ஐந்து பேர் உயிரிழப்பு!

நாமக்கல்: சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில், நின்றுகொண்டிருந்த லாரியின் மீது, கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் உயிரிழந்தனர்.

விபத்துக்குள்ளான கார்
விபத்துக்குள்ளான கார்

நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அடுத்த நவணி தேசிய நெடுஞ்சாலையில் ஓரமாக நின்றுகொண்டிருந்த லாரியின் மீது சேலத்திலிருந்து நாமக்கல் நோக்கி அதிவேகமாகச் சென்றுகொண்டிருந்த கார் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. காரின் இடிபாடுகளில் சிக்கிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உடனடியாக இச்சம்பவம் குறித்து காவல் துறையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது.

பின்னர், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த மாவட்ட ஆட்சியர் மெகராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசு உள்ளிட்ட காவல் துறையினர் உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக நாமக்கல் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

விபத்துக்குள்ளான கார்

இது குறித்து, காவல் துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அவர்கள் திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியைச் சேர்ந்த அசோக்குமார், அவரது மனைவி தேவிப்பிரியா, மூன்று வயதான மகன் சாய் கிருபா, ராஜாமணி, கோமதி ஆகிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.

மேலும், அவர்கள் சீரடி சாய்பாபா கோயிலுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிகொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகக் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையும் படிங்க: லாரி மீது இருசக்கர வாகனம் மோதல்: இருவர் உயிரிழப்பு!

ABOUT THE AUTHOR

...view details