தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வெளிநாட்டில் உயிரிழந்த தொழிலாளி: உடலை தமிழ்நாடு கொண்டுவர கோரிக்கை! - மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர்

மயிலாடுதுறை: மஸ்கட்டில் இறந்த கணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர ஏற்பாடு செய்யக்கோரி உயிரிழந்த தொழிலாளியின் மனைவி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்துள்ளார்.

வெளிநாட்டில் உயிரிழந்த தொழிலாளி: உடலை தமிழகம் கொண்டு வர மனைவி கோரிக்கை!
வெளிநாட்டில் உயிரிழந்த தொழிலாளி: உடலை தமிழகம் கொண்டு வர மனைவி கோரிக்கை!

By

Published : May 2, 2021, 9:54 AM IST

மயிலாடுதுறை முதலாவது புதுத்தெருவைச் சேர்ந்தவர் கணேஷ். கடந்த 10 ஆண்டுகளாக மஸ்கட்டில் வேலை பார்த்துவந்த இவர், கடந்த வாரம் மஸ்கட்டில் உடல்நிலை பாதிக்கப்பட்டு 24ஆம் தேதி கரோனா பரிசோதனை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் அவர் 29ஆம் தேதி உயிரிழந்ததாக கம்பெனி நிர்வாகத்தினர் மயிலாடுதுறையில் உள்ள கணேஷின் உறவினர்களுக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால், கரோனா பாதிப்பால் உயிரிழந்ததற்கான எந்த ஆதாரத்தையும் தராத நிலையில், தனது கணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அந்நிறுவனத்திலிருந்து உரிய இழப்பீட்டுத் தொகையைப் பெற்றுத்தர வேண்டும் என்றும் உயிரிழந்ததாகக் கூறப்படும் கணேஷின் மனைவி கல்பனா மயிலாடுதுறை மாவட்ட வருவாய் அலுவலர் எஸ். முருகதாஸிடம் நேற்று (மே 1) கோரிக்கை மனு அளித்தார்.

இதையடுத்து, உடனடியாக செயல்பட்ட மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் இரா. லலிதா இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி தலைமைச் செயலருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

இதையும் படிங்க:புதுச்சேரியில் மலிவு விலையில் உணவு: தமிழிசை தொடங்கிவைப்பு

ABOUT THE AUTHOR

...view details