நாகப்பட்டினம் மாவட்ட நிர்வாகம், மாவட்ட காவல் துறை, குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் சார்பில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ஒரே நேரத்தில் கடிதம் எழுதும் சாதனை நிகழ்ச்சி நிகழ்த்தப்பட்டது.
இதில் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 1,100 மாணவிகள் கலந்துகொண்டு தங்களது உறவினர்களுக்கு ஒரே நேரத்தில் கடிதம் எழுதும் சாதனை நிகழ்த்தினார். குழந்தைகள் பாதுகாப்பு குறித்த வாசகங்களை எழுதிய மாணவிகள், அதற்கான உறுதிமொழியையும் வாசித்து தங்களது சாதனையைப் பதிவு செய்தனர்.