தமிழ்நாடு

tamil nadu

குழந்தையின் கழுத்தில் இருந்த நகையைத்திருடிய பெண் கைது!

By

Published : Oct 10, 2022, 7:22 AM IST

பேருந்தில் குழந்தையின் கழுத்தில் இருந்த நகையைத் திருடிய மதுரையைச் சேர்ந்த பெண் மயிலாடுதுறையில் கைது செய்யப்பட்டார்.

குழந்தையின் கழுத்தில் இருந்த நகையை திருடிய பெண் கைது...!
குழந்தையின் கழுத்தில் இருந்த நகையை திருடிய பெண் கைது...!

மயிலாடுதுறை: கனரா வங்கி பேருந்து நிறுத்தத்தில் திருவிழந்தூரைச் சேர்ந்த தினேஷ் குமார் என்பவர், அவரது ஏழு வயது பெண் குழந்தை சுபிக்ஷா உடன் பேருந்தில் இருந்து இறங்கியுள்ளார். அப்போது குழந்தையின் கழுத்தில் இருந்த அரை சவரன் தங்கச்சங்கிலியை காணவில்லை.

இந்நிலையில், இதுகுறித்து அருகில் உள்ள காவல்துறையினரிடம் தினேஷ் குமார் புகார் செய்தார். பேருந்தில் அவர் பின்னால் அமர்ந்திருந்த பெண்மணி குறித்து கூறிய அடையாளங்களை வைத்து, காவல் துறையினர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட பெண்மணியைத்தேடினர்.

அப்பொழுது ஒரு கிலோமீட்டர் தூரத்தில் நடந்து சென்ற ஒரு பெண்மணியை, சந்தேகப்பட்டு விசாரணை செய்ததில் பேருந்தில் குழந்தையிடமிருந்து திருடிய அரை சவரன் தங்க நகை அவரிடம் இருந்தது தெரிய வந்தது. உடனடியாக செயின் பறிமுதல் செய்யப்பட்டது.

குழந்தையின் கழுத்தில் இருந்த நகையைத் திருடிய மஞ்சுளா கைது

விசாரணையில் அவர் மதுரை பிள்ளையார் கோவில் பகுதியைச்சேர்ந்த மஞ்சுளா என்பது கண்டறியப்பட்டது. இதனைத்தொடர்ந்து அவர் மீது வழக்குப்பதிவு செய்த மயிலாடுதுறை காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: தெரு நாய்களை தாக்கியதை கண்டித்த காவலரை கட்டையால் அடித்த 5 பேர் கைது

ABOUT THE AUTHOR

...view details