தமிழ்நாடு

tamil nadu

By

Published : Feb 12, 2021, 2:50 PM IST

ETV Bharat / state

மயிலாடுதுறை மாவட்ட அதிமுக செயலாளராக பூம்புகார் எம்எல்ஏ பவுன்ராஜ் நியமனம்

மயிலாடுதுறை: புதிய மாவட்ட அதிமுக செயலாளாராக பூம்புகார் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ். பவுன்ராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மாவட்ட அதிமுக செயலாளராக பூம்புகார் எம்எல்ஏ பவுன்ராஜ் நியமனம்
மாவட்ட அதிமுக செயலாளராக பூம்புகார் எம்எல்ஏ பவுன்ராஜ் நியமனம்

நாகப்பட்டினம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து தமிழ்நாட்டின் 38ஆவது புதிய மாவட்டமாக மயிலாடுதுறை உருவானதற்கு மிக முக்கிய பங்கு வகித்தவர் பூம்புகார் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ். பவுன்ராஜ்.

இதையடுத்து மயிலாடுதுறை மாவட்டத்தின் அதிமுக செயலாளராக எஸ். பவுன்ராஜ் நியமிக்கப்படுவார் என்று கட்சியினரால் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், மயிலாடுதுறை நகர செயலாளராக இருந்த வி.ஜி.கே. செந்தில்நாதன் மயிலாடுதுறை மாவட்ட அதிமுக செயலாளராக நியமிக்கப்பட்டு பொறுப்பு வகித்து வந்தார்.

இந்நிலையில், இன்று (பிப்.12) அவர் மயிலாடுதுறை மாவட்ட அம்மா பேரவை செயலாளராக மாற்றப்பட்டுள்ளார். மேலும், மயிலாடுதுறை மாவட்ட அதிமுக செயலாளாராக பூம்புகார் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.பவுன்ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் 1986இல் அதிமுகவில் உறுப்பினராக இணைந்து கிளை செயலாளர் பதவி வகித்தவர். தொடர்ந்து 1990இல் செம்பனார்கோவில் ஒன்றிய துணை செயலாளர் பதவியும், 2004இல் இருந்து தற்போதுவரை செம்பனார்கோவில் தெற்கு ஒன்றிய செயலாளர் பதவியிலும் தொடர்ந்து பொறுப்பு வகித்து வருகிறார்.

2006ஆம் ஆண்டு பூம்புகார் சட்டப்பேரவை தொகுதி தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். 2011, 2016ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் இரண்டு முறை பூம்புகார் தொகுதியில் எஸ்.பவுன்ராஜ் தொடர்ந்து வெற்றி பெற்று சட்டப்பேரவை உறுப்பினராக பதவி வகித்து வருகிறார்.

இதையும் படிங்க: விவசாய பயன்பாட்டு பம்பு செட்டுக்கு 24 மணி நேர மும்முனை மின்சாரம்!

ABOUT THE AUTHOR

...view details