தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 29, 2021, 12:26 PM IST

ETV Bharat / state

அனுமதியின்றி பரப்புரை: பாமக வாகனம் பறிமுதல்

மயிலாடுதுறை: அனுமதியின்றி தேர்தல் பரப்புரையில் பயன்படுத்தப்பட்ட வாகனத்தை தேர்தல் பறக்கும் படை அலுவலர் விஜயராகவன் தலைமையிலான பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

அனுமதியின்றி பரப்புரை
பாமக வாகனம் பறிமுதல்

மயிலாடுதுறை நல்லத்துக்குடி ஊராட்சியில் பறக்கும் படை அலுவலர் விஜயராகவன் தலைமையில் சிறப்பு காவல் ஆய்வாளர் குணசேகரன், காவலர் மணிகண்டன் மற்றும் இந்தோ-திபெத் பாதுகாப்பு படையினர் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, மயிலாடுதுறை பாமக வேட்பாளர் சித்தமல்லி ஆ.பழனிசாமியை ஆதரித்து அவ்வழியே ஒலிபெருக்கி மூலம் பரப்புரை செய்து சென்ற வாகனத்தை சோதனை செய்தனர். அதில், தேர்தல் நடத்தும் அலுவலரால் வழங்கப்படும் வாகன அனுமதி ஆணை இல்லாதது தெரியவந்தது. தொடர்ந்து, வாகன ஓட்டுநர் முத்துராமனிடம் விசாரணை நடத்தியதில், உரிய ஆவணங்கள் இன்றி பரப்புரை மேற்கொண்டது உறுதியானது.

இதையடுத்து, வாகனத்தையும், அதிலிருந்த ஒலிபெருக்கி மற்றும் ஆம்ப்ளிபையர் ஆகியவற்றையும் பறக்கும் படை அலுவலர் து.விஜயராகவன் கைப்பற்றி மயிலாடுதுறை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

இதையும் படிங்க: சித்தப்பாவுக்காக வாக்கு சேகரித்த சுஹாசினி!

ABOUT THE AUTHOR

...view details