தமிழ்நாடு

tamil nadu

கோயில் கோபுரத்தில் ஆதீன மடாதிபதிகள் சிலைகள்.. சீர்காழி முழுவதும் போஸ்டர்கள்.. நடந்தது என்ன?

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 7, 2023, 3:25 PM IST

Sirkazhi Sattainathar temple: சீர்காழி சட்டநாதர்கோயில் கோபுரத்தில் உள்ள தருமபுர ஆதீனம் மடாதிபதிகளின் திருவுருவ சிலைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கக்கோரி மக்கள் மசோதா கட்சி சார்பில், ஊர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Sirkazhi Sattainathar temple tower issue
"தெய்வங்களுக்கு இணையாக மத தலைவர்களின் உருவ சிலையா"... மக்கள் மசோதா கட்சி போஸ்டரால் பரபரப்பு

மயிலாடுதுறை:மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்துக்கு உட்பட்ட சட்டைநாதர் சாமி கோயில் ஒன்று உள்ளது. இக்கோயிலில் திருநிலைநாயகி அம்மன் உடனாகிய பிரம்மபுரீஸ்வரர் சுவாமி அருள் பாலிக்கிறார். இங்குக் கோயிலில் மலை மீது உமா மகேஸ்வரர், சட்டைநாதர் ஆகிய சாமிகளும் அருள் பாலிக்கின்றனர். மேலும் இக்கோயில் திருஞானசம்பந்தர் அவதார ஸ்தலமாகவும் விளங்குகிறது.

இக்கோயில் பிரம்ம தீர்த்த குளத்தில் திருஞானசம்பந்தருக்கு உமையம்மை ஞானப்பால் வழங்கியதாகப் புராணம் தெரிவிக்கின்றது. இந்த வரலாற்று நிகழ்வு ஆண்டுதோறும் திருமுலைப்பால் விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இத்தகைய பிரசித்தி பெற்ற இக்கோயிலில் கடந்த 1991 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து இதற்கான திருப்பணிகள் முழுமையாக நடைபெற்று முடிந்தது.

அதனைத் தொடர்ந்து 32 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த மே மாதம் 24 ஆம் தேதி தருமபுரம் ஆதீனம் 27 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில், வெகு விமர்சையாக நடைபெற்றது. கும்பாபிஷேகத்தன்று ஹெலிகாப்டர் மூலம் கோபுரங்களில் மலர் தூவப் பட்டிருந்தது. மேலும் கும்பாபிஷேகத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தற்போது கோயில் கோபுரத்தில் தருமபுர ஆதீனம் மடாதிபதிகளான முக்தியடைந்த 26 ஆவது குருமா சன்னிதானம் மற்றும் தற்போதுள்ள 27 வது குருமா சன்னிதானம் ஆகியோரின் திருவுருவ சிலைகள் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இதற்கு கண்டனம் தெரிவித்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் அரசு அலுவலகங்கள், மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் 'மக்கள் மசோதா கட்சி' சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும், அந்த போஸ்டரில் "இந்து அறநிலையத்துறை! தமிழக அரசே!! மாவட்ட நிர்வாகமே!... மனித சமூகத்தை அடிமைப்படுத்திய மத தலைவர்களின் முழு உருவ சிலையை இந்து தெய்வங்களுக்கு இணையாக சீர்காழி சட்டநாதர் ஆலய கோபுரத்தில் நிலைப்படுத்தியதை அகற்றிட உடனடியாக நடவடிக்கை எடு, நடவடிக்கை எடு" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: krishna jayanthi :ஸ்ரீ காளிங்க நர்த்தன ஆலயத்தில் 102 ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா.. ராதை, கிருஷ்ணர் வேடமணிந்து குழந்தைகள் உலா!

ABOUT THE AUTHOR

...view details