தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அதிமுக புதிய மாவட்ட செயலாளர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

நாகப்பட்டினம்: மயிலாடுதுறை மாவட்டத்தின் அதிமுக புதிய மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

By

Published : Aug 3, 2020, 1:06 PM IST

அண்ணா சிலை
அண்ணா சிலை

நாகப்பட்டினம் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து மயிலாடுதுறையை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டத்தை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் அதிமுக கட்சியில் மயிலாடுதுறை மாவட்ட செயலாளராக செந்தில்நாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து புதிய மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் தலைமையில் சீர்காழி சட்டப்பேரவை உறுப்பினர் பாரதி, பூம்புகார் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.பவுன்ராஜ், உள்ளிட்ட அதிமுக கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டு மயிலாடுதுறை பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

இதையடுத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்கள்.

ABOUT THE AUTHOR

...view details