தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வேலி தகராறு: சமையல் மாஸ்டர் அடித்துக் கொலை!

நாகப்பட்டினம்: திருமருகல் அருகே வேலி அமைத்ததில் ஏற்பட்ட தகராறில் சமையல் மாஸ்டர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.

By

Published : Feb 10, 2021, 2:54 PM IST

சமையல் மாஸ்டர் அடித்துக்கொலை
சமையல் மாஸ்டர் அடித்துக்கொலை

நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் கங்களாஞ்சேரி பட்டாணி தெருவைச் சேர்ந்தவர் தியாகராஜன் (60). இவர், சமையல் மாஸ்டராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி விஜயா (45).

இந்நிலையில், பிப். 7ஆம் தேதி இரவு 9 மணியளவில் தியாகராஜனுக்கும், அவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்த அழகர் (45) என்பவருக்கும் இடையே வேலி தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், அழகர் அருகிலிருந்த கட்டையை எடுத்து தியாகராஜன், அவரது மனைவி ஆகியோரை தாக்கியுள்ளார். இதில், பலத்த காயமடைந்த இருவரையும் நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

பின்னர், தியாகராஜன் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு, அவர் தீவிர சிகிச்சைப் பெற்ற நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த திட்டச்சேரி காவல் துறையினர் அழகர், அவரது தம்பி செல்வகுமார் ஆகியோரை தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: பாலில் விஷம் கலந்து தாயை கொலை செய்ய முயன்ற மகன் கைது!

ABOUT THE AUTHOR

...view details