மயிலாடுதுறை: இந்த, 26,500 அரிசி மூட்டைகள்69 லாரிகள் மூலம் மயிலாடுதுறை தமிழ்நாடு அரசு கிடங்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மத்திய அரசு, இந்திய உணவுக் கழகம் மூலம் மத்திய தொகுப்பிலிருந்து நாடு முழுவதும் அரிசியை அனுப்பி வைக்கப்படுகிறது. தமிழ்நாட்டிற்கு மத்திய தொகுப்பு திட்டத்தின் கீழ் மூன்று விதமான திட்டங்களுக்காக கிலோ ஒன்றுக்கு ரூ.2, ரூ.5.65, ரூ.8.35 ஆகிய விலைகளில் அரிசியை வழங்கி வருகிறது.
இந்நிலையில், தெலுங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டம் சுல்தான்பேட்டை என்ற இடத்தில் உள்ள இந்திய உணவுக் கழகக் கிடங்கிலிருந்து 1,317 மெட்ரிக் டன் அரிசி (26,500 புழுங்கல் அரிசி மூட்டைகள்) தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இவை ரயில் மூலம் நேற்று (மே.16) மயிலாடுதுறை ரயில் நிலையத்தை வந்தடைந்தன.