தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசு மருத்துவமனையில் கழிவுநீர் குழாய் உடைப்பு- தொற்றுநோய் பரவும் அபாயம்

மதுரை: அரசு இராசாசி மருத்துவமனையில் உள்ள பிணவறையில் இறந்த உடல்களை கழுவும் கழிவுநீர் செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால், பொதுமக்களுக்கு தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது.

By

Published : Jun 25, 2019, 9:16 AM IST

DRAINAGE DAMAGE

தென் மாவட்டங்களில் மிக முக்கியமான மருத்துவமனைகளில் ஒன்றான மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் உள்ள பிணவறையின் அருகே உள்ள கழிவுநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் இறந்தவர்களின் உடலைக் கழுவும் கழிவுநீர், மருத்துவமனையில் உள்ள கழிவுநீர் அனைத்தும் சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது.

மருத்துவமனையில் கழிவுநீர் குழாயில் உடைப்பு
இந்தக் கழிவுநீர் ஆங்காங்கே தேங்கி நிற்பதால், மருத்துவமனையில் இறந்தவர்களின் உடலைப் பார்க்கவரும் உறவினர்கள், சாலையில் செல்லும் பொதுமக்களுக்கு தொற்றுநோய் ஏற்படும் அபாயநிலை உள்ளது. இதனை உடனடியாக கவனத்தில் கொண்டு மருத்துவமனை நிர்வாகமும் மாநகராட்சி ஊழியர்களும் சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details