கரோனா பரவலைத் தடுக்கும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மக்கள் தேவையின்றி வெளியே வரக்கூடாது என்றும் மருத்துவ மற்றும் அத்தியாவசியத் தேவைகளுக்காக மட்டுமே வீட்டை விட்டு வெளியே வரவேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. அத்தியாவாசியப் பொருள்கள் வாங்க மக்கள் கூட்டம் கூட்டமாக சந்தையில் கூடுவதை தவிர்க்கும் விதமாக தற்காலிக காய்கறிச் சந்தைகள் அரசு சார்பில் அமைக்கப்பட்டன.
அதன்படி, மதுரையில் திருமங்கலம் பேருந்து நிலையத்தில் தற்காலிக காய்கறிச் சந்தை அமைக்கப்பட்டது. இதில், 100க்கும் மேற்பட்ட காய்கறி வியாபாரிகள் கடைகளை அமைத்துள்ளனர். இங்கு காய்கறிகளை வாங்குவதற்கு திருமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் இன்று வந்திருந்தனர்.