தமிழ்நாடு

tamil nadu

அடுத்தடுத்து ஆர்எஸ்எஸ் பிரமுகர்களின் இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு

By

Published : Sep 25, 2022, 8:25 AM IST

மதுரையில் உள்ள ஆர்எஸ்எஸ் பிரமுகர் கிருஷ்ணன் வீட்டின் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் மேலும் பெரும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது

அடுத்தடுத்து ஆர்எஸ்எஸ் பிரமுகர்களின் இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு
அடுத்தடுத்து ஆர்எஸ்எஸ் பிரமுகர்களின் இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு

மதுரை: மேல அனுப்பானடி ஹவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவர் ஆர்எஸ்எஸ் பிரமுகராவார். இந்நிலையில் நேற்று (செப் 24) மாலை அப்பகுதியில் வேகமாக வந்த நபர் ஒருவர், கிருஷ்ணன் வீட்டின் வாசலில் நின்றவாறு அடுத்தடுத்து பெட்ரோல் குண்டுகளை வீசினார்.

இதனிடையே அங்கு இருசக்கர வாகனத்தில் தயாராக நின்று கொண்டிருந்த மற்றொரு நபருடன் ஏறி, பெட்ரோல் குண்டு வீசிய அந்த நபர் தப்பியோடினார். பெட்ரோல் குண்டு வீசியதில் வீடு தீ பற்றி எரியத் தொடங்கியது. தற்போது இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையில் உள்ள ஆர்எஸ்எஸ் பிரமுகர் கிருஷ்ணன் வீட்டின் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம்

மேலும் இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்னதாக சென்னை தாம்பரம் பகுதியில் உள்ள சிட்லபாக்கத்தில் வசித்து வந்த ஆர்எஸ்எஸ் பிரமுகர் சீதாராமன் வீட்டிலும் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.

மேலும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் உள்ள ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவின் பிரமுகர்கள் தொடர்புடைய இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. அதேநேரம் இந்து முன்னணி அமைப்பினரின் கார் சேதப்படுத்தப்பட்டது. தொடர்ச்சியான இச்சம்பவங்களினால் கோவை மாநகரில் அதிவிரைவுப்படை காவல்துறையினரின் அணிவகுப்பு நடைபெற்றது.

மேலும் சென்னையில் உள்ள பாஜக மாநில தலைமை அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:பாஜக, இந்து முன்னணி நிர்வாகிகளின் கார், ஆட்டோ கண்ணாடிகள் உடைப்பு - கோவையில் பரபரப்பு

ABOUT THE AUTHOR

...view details