தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 6, 2020, 3:22 AM IST

ETV Bharat / state

விஜய் முதலமைச்சராக வர வேண்டும் - மதுரையை பரபரப்புக்குள்ளாக்கும் சுவரொட்டி

மதுரை: வருகின்ற 2021ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று நடிகர் விஜய் முதலமைச்சராக வர வேண்டும் என அவரது ரசிகர்களால் மதுரையில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

விஜய்
விஜய்

எஸ்.ஏ. சந்திரசேகர் தனது மகன் நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக பதிவு செய்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், மதுரையில் விஜய் ரசிகர்கள் ஒட்டியுள்ள சுவரொட்டிகள் மேலும் கவனத்தை ஈர்த்துள்ளன.

தனது தந்தையாரின் கட்சிக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என விஜய் அறிவித்துள்ளார். ஆனால், மதுரை மாநகர் வடக்கு மாவட்ட மாணவரணி தளபதி தலைமை நற்பணி மன்றம் சார்பில் நகர் முழுவதும் ஒட்டப்பட்ட இந்த சுவரொட்டிகள் விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையை பரபரப்புக்குள்ளாக்கும் சுவரொட்டி
'சரியான நேரம் வரட்டும்..! சிஎம் பதவி மக்களே தரட்டும்..! என்ற வாசகங்கள் அந்த சுவரொட்டியில் இடம்பெற்றுள்ளன. கடந்த வாரம் நடிகர் விஜய் அரசியல் தொடர்பாக தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்த நிலையில், அவரது ரசிகர்கள் நடிகர் விஜய்யை 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் களம் காண அழைப்பது போல் இந்த சுவரொட்டிகள் அமைந்துள்ளன.

ABOUT THE AUTHOR

...view details