தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பைனான்சியர் கொலை வழக்கு; கூலிப்படை ஆசாமி நீதிமன்றத்தில் சரண்!

மதுரை: பைனான்சியரை கொடூரமாக வெட்டிக் கொலை செய்த சம்பவத்தில் ஒருவர் மாவட்ட நீதிமன்றத்தில் இன்று சரணடைந்துள்ளார்.

mdu

By

Published : Jun 4, 2019, 11:45 PM IST

மதுரை அலங்காநல்லூர் பகுதியில் பைனான்சியர் இளங்கோவன் என்பவரை அவருடைய மனைவி மற்றும் மகள் கூலிப்படையை ஏவி சில நாட்களுக்கு முன்பு கொலை செய்தனர். இதுதொடர்பான பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் நேற்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பாக இளங்கோவனின் மகள் மற்றும் மனைவியை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கொலையில் ஈடுபட்ட கூலிப்படையைச் சேர்ந்த புதூர் பகுதியைச் சேர்ந்த மகேஷ் பாபு என்பவர் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் இன்று சரணடைந்தார். இதைத் தொடர்ந்து அவரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி கௌதமன் உத்தரவிட்டார்.

ABOUT THE AUTHOR

...view details