தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாவட்ட நீதிமன்றங்களில் அரசு வழக்கறிஞர்கள் நியமனம்: அரசுக்கு நீதிபதிகள் கேள்வி!

மாவட்ட நீதிமன்றங்களில் அரசு வழக்கறிஞர் நியமனத்திற்கு தளர்வுகள் வழங்கப்பட்டிருப்பதாக செய்திகள் வருவதால், அதிகப்படியான விண்ணப்பங்கள் வந்தால் எதன் அடிப்படையில், பரிசீலனை செய்து வழக்கறிஞரைத் தேர்வு செய்வீர்கள் என, நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

By

Published : Jul 12, 2021, 7:44 PM IST

சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை
சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை

மதுரை: மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் கண்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றினைத் செய்திருந்தார். அதில், "தற்போது மாவட்ட நீதிமன்றங்கள், கீழமை நீதிமன்றங்களில் அரசு வழக்கறிஞர் நியமனத்திற்கான விண்ணப்பங்களை பெறப்பட்டு வருகின்றன.

விரைவில் அரசு வழக்கறிஞர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இந்தப் பட்டியலில் தகுதி வாய்ந்த வழக்கறிஞர்கள் இடம்பெற வேண்டும். அவ்வாறில்லாமல் தகுதியற்ற நபர்கள் நியமிக்கப்பட்டால், நீதிமன்ற பணிகள் பாதிக்கப்படும். 2017ஆம் ஆண்டு நியமன விதிகளின் படியும், உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின் படியும் தமிழ்நாட்டில் உள்ள மாவட்ட நீதிமன்றங்கள் மற்றும் கீழமை நீதிமன்றங்களில் அரசு வழக்கறிஞர்களை நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சட்ட வல்லுநர்கள் குழு அமைத்து அரசு வழக்கறிஞர்கள் நியமனம் தொடர்பாக 2017ஆம் ஆண்டு அரசு வழக்கறிஞர்கள் நியமன விதிமுறைபடி மாவட்ட நீதிமன்றங்கள் , கீழமை நீதிமன்றங்களில் அரசு வழக்கறிஞர்கள் நியமிக்க வேண்டும்.

அதன் பின்னர் அவர்களது விபரங்களை இணையத்தில் வெளியிட உத்தரவிட வேண்டும்" என கோரியிருந்தார்

இந்த மனுவினை விசாரித்த நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி அடங்கிய அமர்வு, தற்போது மாவட்ட நீதிமன்றங்களில் அரசு வழக்கறிஞர் நியமன விதிகளில் சில தளர்வுகள் வழங்கி இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மாவட்ட நீதிமன்றகளுக்கான அரசு வழக்கறிஞர் நியமனத்திற்கு அதிக அளவில் விண்ணப்பங்கள் வந்திருப்பதாக கடந்தமுறை தெரிவிக்கப்பட்டது. 2 லட்சம் விண்ணப்பங்கள் வந்தால் அவற்றை எதனடிப்படையில் பரிசீலனை செய்து தேர்வு செய்வீர்கள்? என கேள்வி எழுப்பினர்.

அரசு தரப்பில், அரசு தலைமை வழக்கறிஞர் ஆஜராக இருப்பதால் காலஅவகாசம் வழங்க வேண்டும் என கோரப்பட்டது. இதனையடுத்து நீதிபதிகள் வழக்கை ஜூலை 20ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க:'சீர்மிகு சட்டப்பள்ளியில் பயின்றவர்களுக்கும் உதவித்தொகை' - உயர் நீதிமன்றம்

ABOUT THE AUTHOR

...view details