தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருநங்கையை திருமணம் செய்த இளைஞர்: குடும்பத்தினர் கொலை மிரட்டல்!

மதுரை : திருநங்கையை திருமணம் செய்துகொண்ட இளைஞர் ஒருவர், திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அச்சுறுத்தும் தனது குடும்பத்தினரிடமிருந்து பாதுகாப்பு கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளி்த்துள்ளார்.

By

Published : Oct 15, 2019, 10:47 PM IST

madurai trans women get married

மதுரை சுண்ணாம்பு காளவாசல் செல்வ விநாயகர் கோயிலைச் சேர்ந்தவர் பஷீர். ஏற்கனவே திருமணமான இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்த ஏழு வருடத்திற்கு முன்பு இவரது மனைவி இறந்துவிட்ட நிலையில், மதுரை செல்லூர் அகிம்சாபுரத்தைச் சேர்ந்த திருநங்கை கல்கியை நேற்று திருமணம் செய்துகொண்டார்.

திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அச்சுறுத்தல் கொடுக்கும் தங்களது குடும்பத்தினரிடமிருந்து பாதுகாப்பு வழங்கக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருவரும் தஞ்சமடைந்தனர்.

திருநங்கைய திருமணம் செய்த இளைஞர்

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பஷீர், “எங்களது திருமணத்திற்கு குடும்பத்தினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து உயிருக்கு அச்சுறுத்தலாக உள்ளனர். எனவே அவர்களிடமிருந்து பாதுகாப்பு கேட்டு ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளோம்” என்றார்.

இதையும் படிங்க:ராஜிவ் கொலை குறித்து சர்ச்சைக்குரிய பேச்சு: சீமான் வீட்டிற்கு பலத்த பாதுகாப்பு

ABOUT THE AUTHOR

...view details