தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 25, 2020, 8:55 PM IST

ETV Bharat / state

காசநோய் மருத்துவமனை தற்போது கரோனா மருத்துவமனையாக மாற்றம்

மதுரை: கரோனா அச்சுறுத்தலால் காசநோய் மருத்துவமனை தற்போது கரோனா மருத்துவமனையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கரோனா மருத்துவமனையாக மாற்றம்
கரோனா மருத்துவமனையாக மாற்றம்

தமிழ்நாடு முழுவதும் அதிவேகமாக பரவி வருகின்ற கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும், கண்காணிப்பதற்கும் மதுரை ராசாசி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து, மதுரை தோப்பூரில் அமைந்துள்ள அரசு நுரையீரல் மருத்துவமனை வளாகத்தில் 95 படுக்கை வசதிகள் கொண்ட தற்காலிக கரோனா வார்டு தயார் நிலையில் உள்ளது.

அதிநவீன சிகிச்சை அளிப்பதற்கென அனைத்து வசதிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டதுடன், ஒவ்வொரு படுக்கைகளுக்கும் இடையே ஒரு மீட்டர் இடைவெளி விட்டும், அடிக்கடி கைகளை கழுவி சுத்தமாக வைத்துக் கொள்ளவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கரோனா மருத்துவமனையாக மாற்றம்

இதற்காக அரசு நுரையீரல் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்த 30க்கும் மேற்பட்ட காசநோயாளிகளை அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும், தீவிர நிலையில் உள்ள நோயாளிகளுக்கு மட்டும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: மருத்துவர்கள் தங்கள் இல்லத்திற்கு செல்ல வேண்டாம் - மக்கள் நல்வாழ்வுத் துறை

ABOUT THE AUTHOR

...view details