தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 3, 2019, 7:22 PM IST

ETV Bharat / state

கோயில் ஆவணங்களை தமிழ் மொழிக்கு மாற்ற உத்தரவு !

மதுரை: கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கோயில் நிலங்கள் தொடர்பான ஆவணங்களை மலையாளத்திலிருந்து தமிழ் மொழிக்கு மாற்ற உரிய நடவடிக்கை எடுக்குமாறு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

குமரி மாவட்ட கோயில் ஆவண வழக்கு  கோயில் ஆவணங்களை மலையாளத்திலிருந்து தமிழுக்கு மாற்ற உத்தரவு  மதுரை மாவட்டச் செய்திகள்  madurai district news  kanyakumari temple Malayalam record case  high court order to take action on translate the record of kanyakumari temple Malayalam to Tamil
high court

ஆதிகேசவ பக்தர்கள் சேவை அறக்கட்டளை செயலர் தங்கப்பன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், "கேரள மாநிலத்திliருந்து தமிழ்நாட்டுடன் கன்னியாகுமரி மாவட்டம் இணைக்கப்பட்டபோது, கேரள தேவசம் போர்டு நிர்வாகத்தின் கீழ் இருந்த 490 கோயில்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்தன. பழமையான இந்த கோயில்கள் அனைத்தும் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டுக்குள் வந்தது.

இந்த கோயில்களுக்கு சொந்தமான சொத்துகள் தொடர்பான ஆவணங்கள், திருக்கோயில் பதிவேட்டில் மலையாள மொழியில் அச்சிடப்பட்டு பழைய செட்டில்மென்ட் பதிவாகவே இதுவரை உள்ளது. மலையாள மொழியில் உள்ள ஆவணங்களின் நிலை குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்டபோது, மிகவும் சேதமடைந்த நிலையில் இருப்பது தெரியவந்தது. தற்போது, கோயில்களின் நிலங்களின் உரிமம் தனிநபர் பெயருக்கு மாற்றப்பட்டு வருகிறது. இதுகுறித்து இந்து சமய அறநிலையத் துறையும் அறியவில்லை.

எனவே, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கோயில்களுக்குச் சொந்தமான இடங்கள் தொடர்பான மலையாள மொழியில் உள்ள பழைய செட்டில்மென்ட் பதிவேட்டைச் சிறந்த மொழிபெயர்ப்பு குழுவினரை அமைத்து மலையாள மொழியில் இருந்து தமிழ் மொழிக்கு மாற்றம் செய்து, அதனை ஆவணப்படுத்தி சம்பந்தப்பட்ட நீதிமன்றங்கள், வருவாய்த் துறை அலுவலகங்கள், சார் பதிவாளர் அலுவலகங்களில் பாதுகாக்க உரியஉத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் துரைசாமி, ரவீந்திரன் ஆகியோர் கொண்ட அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரரின் கோரிக்கையை தமிழ்நாடு அரசின் வருவாய்த் துறை முதன்மைச் செயலர், குமரி மாவட்ட ஆட்சியர், இந்து சமய அறநிலையத் துறை அலுவலர்கள் எட்டு வாரத்தில் சட்டப்படி பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

இதையும் படிங்க: சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு புதிய ஐ.ஜி.யாக 'அன்பு ஐ.பி.எஸ்' நியமனம்!

ABOUT THE AUTHOR

...view details