தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாடுகளின் கொம்பில் ஒளிரும் ஸ்டிக்கர்கள்.. விபத்துகளை தவிர்க்க மதுரை போலீசார் புது முயற்சி..

தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் திரியும் மாடுகளால் இரவு நேரத்தில் ஏற்படும் விபத்துகளை தவிர்க்க ஒளிரும் ஸ்டிக்கர்களை மாடுகளின் கொம்புகளில் மதுரை மாவட்ட போலீசார் ஒட்டி புதிய முயற்சியை எடுத்துள்ளனர்.

By

Published : Feb 25, 2023, 10:36 PM IST

மாடுகளின் கொம்பில் ஒளிரும் ஸ்டிக்கர்கள்
மாடுகளின் கொம்பில் ஒளிரும் ஸ்டிக்கர்கள்

மதுரை மாவட்டத்தில் சாலை விபத்துகளை தடுக்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மதுரை மாவட்ட காவல்துறை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் மதுரை மாவட்டம் ஒத்தக்கடை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான கிராமங்கள் உள்ளன. அங்கு வசிக்கும் பெரும்பாலானோர் மாடுகளை மேய்ச்சலுக்காக கொண்டு செல்லும் இரவு நேரங்களில், அவை சாலையை கடக்கும் போது விபத்துக்கள் ஏற்படுவது வாடிக்கையாகி உள்ளது.

இதனால் 2 மற்றும் 4 சக்கர வாகனங்களில் வருபவர்களுக்கு காயம் ஏற்படுவதுடன், உயிரிழப்புகளும் நிகழ்கிறது. இதனை தடுக்கும் வகையில் மாடுகளின் கொம்புகளில் ஒளிரும் ஸ்டிக்கர்களை போக்குவரத்து காவல்துறையினர் ஒட்டி வருகின்றனர். மதுரை ஒத்தக்கடை போக்குவரத்து பிரிவு காவல் ஆய்வாளர் பழனிக்குமார் தலைமையிலான போக்குவரத்து காவல்துறையினர், சாலையில் சுற்றி திரியும் மாடுகள் மற்றும் நெடுஞ்சாலைகளை சுற்றி உள்ள கிராமங்களில் மாடுகளை வைத்திருக்கும் பொது மக்களின் வீடுகளுக்குச் சென்று மாடுகளின் கொம்புகளில் ஸ்டிக்கர்களை ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: மதுரை-கொல்கத்தா வாராந்திர பார்சல் எக்ஸ்பிரஸ் ரயில் - அஞ்சல் துறை மற்றும் ரயில்வேயின் கூட்டு சாதனை

ABOUT THE AUTHOR

...view details