இதுகுறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "மதுரை மாநகரத்தில் “Rapido Bike Taxi" என்ற கர்நாடக மாநிலத்தை தலைமையகமாக கொண்ட ஒரு தனியார் நிறுவனம் வாடகை கார்கள் இயக்குவது போல் பொதுமக்களிடம் Online Mobile App வழியாகவும் www.rapido.bike என்ற Website மூலமும் பொதுமக்களை தொடர்பு கொள்கின்றனர்.
அவ்வாறு தொடர்பு கொண்டு மோட்டார் வாகனச் சட்டங்கள், விதிமுறைகளின்படி முறையான அங்கீகாரம் பெறாமல் சுமார் 2000த்திற்கும் மேற்பட்ட இரண்டு சக்கர வாகன உரிமையாளர்களை உறுப்பினர்கள் ஆக மாற்றி மதுரை மாநகரில் அனுமதியற்ற வகையில் Bike Taxiகள் இயக்கி வருவது தெரியவந்துள்ளது.
சுமார் 40-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகன உரிமையாளர்கள் மீது மதுரை மாநகர வட்டார போக்குவரத்து அதிகாரிகள் மூலம் கடந்த வாரம் நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவ்வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மதுரை மாநகர காவல் ஆணையர் நரேந்திரன் நாயர் மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டங்களின் அடிப்படையில் சட்டப்படி அங்கிகாரம் பெறாத "Rapido Bike Taxi" நிறுவனத்திடம் Mobile App வழியாக தொடர்பு கொண்டு வாடகைக்கு இரு சக்கர வாகனங்களை இயக்கும் வாகன உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.