தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தற்காலிக ஆசிரியர்கள் நியமித்தல் தொடர்பான வழக்கு; அரசுத்தரப்பில் விளக்கம் தெரிவிக்க ஆணை

தமிழ்நாடு அரசின் பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களை தற்காலிக ஆசிரியர்கள் மூலம் நிரப்புவது தொடர்பான அறிவிப்பை ரத்து செய்யக்கோரிய வழக்கு அரசுத்தரப்பில் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க உத்தரவிட்டுள்ளனர்.

By

Published : Jun 30, 2022, 4:42 PM IST

தற்காலிக ஆசிரியர்கள் நியமித்தல் தொடர்பான வழக்கு
தற்காலிக ஆசிரியர்கள் நியமித்தல் தொடர்பான வழக்கு

மதுரை: ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சங்கத்தின் தலைவர் ஷீலா உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினை தாக்கல் செய்திருந்தார்.
அதில்,"கடந்த 2013ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற ஏராளமானோர் அப்போதிருந்த வெயிட்டேஜ் முறையால் பணிக்குத் தேர்வாகவில்லை.

இந்நிலையில் தமிழ்நாடு அரசின் பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை, முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை தற்காலிக ஆசிரியர்களைக் கொண்டு நிரப்ப திட்டமிட்டு அரசு கடந்த 23ஆம் தேதி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

தற்காலிக ஆசிரியர்கள் தேர்வு தொடர்பாக முறைப்படுத்தப்பட்ட வழிமுறைகள் எதுவும் இல்லை. அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர்கள் அவர்களுக்குத் தேவையான நபர்களை பணியில் நியமித்துக்கொள்ள வாய்ப்பு உள்ளது. இதனால் தகுதியற்றவர்கள் தற்காலிக ஆசிரியர்களாக நியமிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

ஆகவே, இவற்றைக்கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசின் பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களை தற்காலிக ஆசிரியர்கள் மூலம் நிரப்புவது தொடர்பான அறிவிப்பை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், முறையான வழிகாட்டுதல் இல்லாமல், தகுதியற்ற தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பது ஆபத்தானது எனக் குறிப்பிட்டார். அதைத்தொடர்ந்து அரசு தரப்பில், விளக்கம் பெற்று தெரிவிக்க கால அவகாசம் கோரப்பட்டது. இதை ஏற்ற நீதிபதி அரசுத்தரப்பில் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க உத்தரவிட்டு வழக்கை நாளை ஒத்திவைத்தார்.

இதையும் படிங்க:'பாஜகவின் 8 ஆண்டுகள் ஆட்சி வேதனை நிறைந்தது' - கே.பாலகிருஷ்ணன்

ABOUT THE AUTHOR

...view details