மதுரை:மதுரை முதல் நத்தம் சாலையில் 114 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கலைஞர் நினைவு நூலக கட்டடப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
கலைஞர் நினைவு நூலக கட்டடப் பணி: தவறி விழுந்து வடமாநிலத்தொழிலாளி பலி!
மதுரையில் கட்டப்பட்டு வரும் கலைஞர் நினைவு நூலக கட்டடப்பணியின்போது மாடியில் இருந்து விழுந்த மேற்குவங்கத்தைச் சேர்ந்த வட மாநிலத்தொழிலாளர் உயிரிழந்துள்ளார்.
கலைஞர் நினைவு நூலக கட்டிடப் பணியில் தவறி விழுந்து பலியான வடமாநில தொழிலாளி
இன்று (ஆகஸ்ட் 01) கட்டடப் பணியில் ஈடுபட்டிருந்த மேற்கு வங்காளத்தைச்சேர்ந்த இக்பால் என்ற கட்டடத்தொழிலாளி மாடியில் இருந்து தவறி விழுந்து பலியானார். அவரது உடல் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக கொண்டு செல்லப்பட்டது. இச்சம்பவம் குறித்து மதுரை தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:வாக்காளர் அட்டையுடன் ஆதார் அட்டையை இணைப்பதில் திமுகவிற்கு உடன்பாடு இல்லை - ஆர்.எஸ். பாரதி