தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 11, 2019, 10:42 PM IST

ETV Bharat / state

சாலைப்பணிகளை ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர்

கிருஷ்ணகிரி: சூளகிரி பகுதியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் நடைபெற்று வரும் சாலைப்பணிகளை மாவட்ட ஆட்சியர் பிரபாகர் ஆய்வு மேற்கொண்டார்.

சாலைப்பணிகளை ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆயிரத்து 652 கி.மீ. சாலைகள் நெடுஞ்சாலைத்துறை சார்பில் பராமரிக்கப்பட்டு வருகிறது. சாலை விரிவாக்கம், மேம்பாலம் அமைத்தல், சிறு பாலங்கள் அமைத்தல் ஆகியவற்றிற்காக 2018-19ஆம் நிதியாண்டில் ரூ.196 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பல்வேறு சாலை பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை மாவட்ட ஆட்சியர் பிரபாகர் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே பாத்தகோட்டா சாலையில் இரண்டு கோடியே 90 லட்சம் மதிப்பில் கட்டிமுடிக்கப்பட்ட உயர்மட்ட பாலத்தையும் பார்வையிட்டார்.


இதையும் படிங்க: ஈடிவி பாரத் செய்தி எதிரொலி: குலு மணாலியிலிருந்து சொந்த மாநிலத்திற்கே அழைத்து வரப்பட்ட பெண்!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details