தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 23, 2020, 1:47 AM IST

ETV Bharat / state

கிணற்றில் தவறி விழுந்த இரண்டு சிறுமிகள் உயிரிழப்பு!

கிருஷ்ணகிரி: ஊத்தங்கரை அருகே குளிக்கச் சென்ற இரண்டு சிறுமிகள் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தனர்.

கிணற்றில் தவறி விழுந்த இரண்டு சிறுமிகள் உயிரிழப்பு!
Two girls dead after fell down into well

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள கோடால வலசை கிராமத்தைச் சேர்ந்தவர்கள் எட்டாம் வகுப்பு முடித்த ஆனந்தி (13), ராதிகா (13) என்ற சிறுமிகள்.

இவர்கள் இருவரும் கிராமத்தின் அருகே உள்ள மாணிக்க கவுண்டர் விவசாய நிலத்தின் கிணற்றில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது, திடீரென படிக்கட்டிலிருந்து தவறி இரண்டு சிறுமிகளும் கிணற்றுக்குள் விழுந்தனர்.

இருவருக்கும் நீச்சல் தெரியாததால் கிணற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறை, தீயணைப்பு துறை அலுவலர்கள் பல மணி நேரம் போராடி சிறுமிகளின் உடலை மீட்டனர்.

பின்னர், உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், சிறுமிகளின் இறப்பு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details