தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 5, 2020, 1:34 AM IST

ETV Bharat / state

கோயம்பேடு ரிட்டர்ன் இளைஞருக்கு கரோனா வைரஸ் தொற்று!

கரூர்: சென்னை கோயம்பேட்டில் இருந்து காய்கறி லாரியில் வந்த இளைஞருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Corona list in karur district
COVID-19 positive in karur

சென்னை கோயம்பேட்டிலிருந்து வந்தவர்களின் மூலம் தமிழ்நாடு முழுவதும் கரோனா வைரஸ் தொற்று பரவி வருகிறது. இதையடுத்து கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கோயம்பேட்டில் இருந்து வந்த காய்கறி லாரி மூலம் கரூர் வந்தடைந்தார். அவருக்கு கரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அவருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

தற்போது அந்த இளைஞர் கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். மேலும், சென்னை கோயம்பேட்டில் இருந்து வந்தவர்கள் விவரத்தை மாவட்ட நிர்வாகம் ஆராய்ந்து வருகிறது.

இதையும் படிங்க:கோயம்பேட்டிலிருந்து கடலூர் சென்ற 107 பேருக்கு கரோனா!

ABOUT THE AUTHOR

...view details