கரூர் மாவட்ட பாஜக பிரசார பிரிவு சார்பில் தேசிய கல்விக் கொள்கை கருத்தரங்கம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் பிரசார பிரிவு மாவட்ட தலைவர் ராஜேஷ் குமார் தலைமை வகித்தார். பாஜக மாவட்ட தலைவர் சிவசாமி, தமிழ்நாடு பாஜக துணைத் தலைவர் அண்ணாமலை ஆகியோர் சிறப்புரையாற்றினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் தமிழ்நாடு பாஜக துணைத் தலைவர் அண்ணாமலை பேசுகையில், "கரூர் மாவட்டத்தில் இரண்டு இடங்களில் பாஜக சட்டப்பேரவைத் தேர்தலை சந்திப்போம். வேல் யாத்திரையை தடை செய்யக்கோரி இரண்டு சமூக ஆர்வலர்கள் தொடர்ந்த வழக்கில்தான் நீதிமன்றம் அரசிடம் கருத்து கேட்டிருக்கிறது.