தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முதலமைச்சர் துணை மின் நிலையம் திறந்துவைப்பு!

கரூர்: கிருஷ்ணராயபுரம் அடுத்த  உப்பிடமங்கலம் கிராமத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள துணை மின் நிலையத்தை தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கிவைத்தார்.

By

Published : Jun 21, 2019, 1:42 PM IST

துணை மின் நிலையம் திறப்பு !

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் வட்டத்திற்கு உட்பட்ட உப்பிடமங்கலத்தில் தமிழ்நாடு மின் உற்பத்தி; பகிர்மான கழகம் சார்பாக ரூ.402.35 லட்சம் செலவில் 33/11 கிலோவோல்ட் திறன்கொண்ட துணை மின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் திறந்துவைத்தார்.

துணை மின் நிலையம் திறப்பு

இந்த துணை மின் நிலையத்தில் நடைபெற்ற தொடக்க விழா நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் குத்துவிளக்கு ஏற்றிவைத்து தலைமை தாங்கினார்.

ABOUT THE AUTHOR

...view details