தமிழ்நாடு

tamil nadu

தேர்தல் கருத்துக் கணிப்பு நடத்தியவர்கள் மீது அதிமுகவினர் தாக்குதல்!

By

Published : Apr 1, 2021, 9:33 AM IST

Updated : Apr 1, 2021, 9:39 AM IST

கரூர்: சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றி வாய்ப்பு குறித்து கருத்துக் கணிப்புப் பணியில் ஈடுபட்டவர்களை அதிமுகவினர் தாக்கி செல்போன் பறித்துச் சென்ற சம்பவம் பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தல் கருத்து கணிப்பு நடத்தியவர்கள் மீது அதிமுகவினர் தாக்குதல்  தேர்தல் கருத்து கணிப்பு  அதிமுக தாக்குதல்  அதிமுகவினர் அராஜகம்  எம்.ஆர்.விஜயபாஸ்கர்  ADMK attacks election pollsters In Karur  ADMK attack  Election poll  M. R. Vijayabhaskar
ADMK attacks election pollsters In Karur

கரூர் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளில், கரூர் தொகுதியில் அதிமுக சார்பில் தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் போட்டியிடுகிறார். தேர்தலையொட்டி செய்தி நிறுவனங்கள், தனியார் அமைப்புகள் சார்பில் கருத்துக் கணிப்புகள் தமிழ்நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

அந்த வகையில், சென்னையைச் சேர்ந்த பீப்புள்ஸ் டேட்டா ஃபேக்டரி என்ற நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் கரூர் மாவட்டத்தில் தேர்தல் கருத்துக் கணிப்புப் பணியில் ஈடுபட்டபோது, அதிமுகவினர் அவர்களைத் தாக்கி செல்போனைப் பறித்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து பீப்பிள்ஸ் டேட்டா ஃபேக்டரி நிறுவனத்தின் இயக்குநர் பாலமுருகன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறுகையில், "கரூர் மாவட்டத்தில் தேர்தல் கருத்துக் கணிப்பில் எங்கள் நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர்கள் கடந்த நான்கு நாள்களாக ஈடுபட்டுவருகின்றனர்.

மார்ச் 30ஆம் தேதி கரூர் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பெரிய காளிபாளையம் பகுதியில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்தபோது, அப்பகுதியில் தங்கள் நிறுவனம் கருத்துக்கணிப்பு நடத்தியது. கருத்துக்கணிப்பு செய்தவர்கள் போக்குவரத்து அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரின் தேர்தல் பரப்புரையை செல்போனில் காணொலியாகப் பதிவுசெய்துள்ளனர்.

அப்போது, அங்கு வந்த அதிமுக பிரமுகர் கோவர்தன் என்பவர் கருத்துக் கணிப்பு நடத்தியவர்களைத் தாக்கி செல்போனைப் பறித்துச் சென்றார். அத்துடன் அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்கள் வாங்கல் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு வருமாறு அழைத்துச் சென்றனர்.

காவல் நிலையத்தில், பல மணி நேரம் காத்திருந்தோம். ஆனால், காவலர்கள் செல்போனை பெற்றுத் தராமல் தாக்கிய அதிமுக பிரமுகர் கோவர்த்தனிடமே திருப்பிக் கொடுத்துள்ளார். செல்போனைப் பெற்றுத் தரக்கோரி வாங்கல் காவல் நிலையத்தில் பலமுறை கோரியும் எங்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை.

செய்தியாளர்களிடம் பேசும் பீப்பிள்ஸ் டேட்டா ஃபேக்டரி நிறுவனத்தின் இயக்குநர் பாலமுருகன்

எனவே இது குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளரைச் சந்தித்து மனு அளிக்கவந்த நிலையில், அவரும் மனுவைப் பெற்றுக்கொள்ள மறுத்துவிட்டார். காவல் துணைக்கண்காணிப்பாளரிடம் அளிக்கும்படி அலைக்கழிப்புச் செய்கிறார்.

அமைச்சர் என்பவர் அனைவருக்கும் பொதுவான நபர், இதுபோன்று அராஜகங்களில் ஈடுபடுவது அதிர்ச்சி அளிக்கிறது. புகாரை வாங்க மறுத்த காவல் துறை அலுவலர்கள் மீது தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்க உள்ளோம்" என்றார்.

தேர்தல் நடைபெற உள்ள நேரத்தில் அதிமுகவினரின் இத்தகைய செயல் பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:உலக பொருளாதாரத்தை மீண்டும் மிதக்கவைத்த 'எவர்கிவன்'!

Last Updated : Apr 1, 2021, 9:39 AM IST

ABOUT THE AUTHOR

...view details