தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பைனான்ஸ் தொழிலில் ஆக்கிரமிப்பு சான்றிதழ் கட்டாயம்!

கரூர்: கரூர் மாவட்ட பைனான்ஸ் மற்றும் சிட் பைனான்ஸ் அசோசியேஷன் சார்பாக 31வது சபைக் கூட்டம் நடைபெற்றது.

கரூர்

By

Published : Aug 14, 2019, 12:24 AM IST

கரூர் மாவட்டம், தனியார் கல்யாண மண்டபம் ஒன்றில் மாவட்ட பைனான்ஸ் மற்றும் சிட் பைனான்ஸ் அசோசியேஷன் சார்பாக 31ஆவது சபைக் கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக சென்னை வழக்கறிஞர் குமரேசன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்பொழுது அவர் பேசுகையில், நிதி நிறுவனங்கள் கடன் அளிக்கும் பொழுது கட்டாயமாக ஆக்கிரமிப்பு சான்றிதழ் இணைக்க வேண்டும்.

ஏனென்றால் கடன் பெற்றவர்கள் நிதி கட்டத் தவறினால் அந்த சான்றிதழை வைத்து மேல்முறையீடு செய்து நீதிமன்றத்தில் முறையிட முடியும் . ஆதலால் ஆக்கிரமிப்பு சான்றிதழ் கட்டாயம் அவசியம் என்றார்.

பைனான்ஸ் தொழிலில்-ஆக்கிரமிப்பு சான்றிதழ் கட்டாயம்
இதில் கரூர் மாவட்டத்தில் இருக்கக்கூடிய பைனான்ஸ் மற்றும் சிட்பண்ட்ஸ் அசோசியேஷன் சார்பாக 300க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details