கன்னியாகுமரி: நாகர்கோவிலில் நள்ளிரவில் தொலைக்காட்சி வெடித்து 3 வீடுகள் தீக்கிரையாகின.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி அருகே உள்ள பகுதியில் வசந்தகுமார் என்பவர் நேற்றிரவு தன் வீட்டில் குடும்பத்தினருடன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்த்து கொண்டிருந்தார். நள்ளிரவில் வீட்டிலிருந்த அனைவரும் தூங்கிய நிலையில் தொலைக்காட்சியின் மின் இணைப்பை துண்டிக்காமல் இருந்துள்ளனர். இதனால் நள்ளிரவிலும் இயங்கி கொண்டிருந்த தொலைக்காட்சி, திடீரென வெடித்து வீட்டில் தீ பற்றி எரிந்தது.