கன்னியாகுமரிமாவட்டம், தாழாக்குடி பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் இப்பகுதியில் உள்ள பேருந்து நிலையத்தில் பயணிகள் நிழற்குடையின் ஒரு பக்கம் சுவரில் முதன்முதலில் ’ஜெய்ஹிந்த்’ முழக்கமிட்ட செண்பகராமன் ஓவியமும், மறுபுறம் ’செக்கிழுத்த செம்மல்’ சுதந்திர போராட்ட தியாகி வ.உ.சிதம்பரனார் ஓவியமும் வரையப்பட்டிருந்தது.
இதனிடையே இன்று (ஆக.7) கருணாநிதியின் நினைவுநாளை முன்னிட்டு அப்பகுதி திமுகவினர் வ.உ.சிதம்பரனாரின் ஓவியத்தின்மீது கருணாநிதியின் புகைப்படத்தை நிறுவி மாலை அணிவித்தனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.