கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் தமிழ்நாடு மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 72ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, செல்வமகள் சேமிப்புத் திட்டத்தின்கீழ் சேமிப்புக் கணக்குப் புத்தகங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
நாகர்கோவில் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்த விழாவில் தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி தளவாய் சுந்தரம், முதுநிலை கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் சந்திரசேகர் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.