கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடி அடுத்த காமராஜர் நகரைச் சேர்ந்த தம்பதி ராம்குமார் (25), கவிதா (23). இவர்களுக்கு கடந்த ஒன்பது மாதங்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது.
குடும்பத் தகராறு
கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வேலைக்காக வெளிநாட்டு சென்றுள்ளார். ராம்குமாரின் தாயார், மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று (மார்ச் 13) கவிதாவின் மாமியார் சந்தைக்குச் சென்று திரும்பியபோது, கதவு உட்புறமாக பூட்டப்பட்டிருந்தது.