தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து பேரணி

மத்திய அரசு கொண்டு வந்த சட்டமான குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக்கோரி தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் மற்றும் இஸ்லாமியர்களின் அனைத்து கூட்டமைப்பு சார்பில் பேரணி நடத்தப்பட்டது

By

Published : Jan 26, 2020, 6:51 PM IST

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து பேரணி
குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து பேரணி

செங்கல்பட்டு:

இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி இஸ்லாமியர்களின் அனைத்து கூட்டமைப்பு சார்பில், சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள், ஆண்கள் மற்றும் குழந்தைகள் என அனைவரும் தேசியக் கொடியை ஏந்தி கலந்துகொண்டனர். மேலும் செங்கல்பட்டு ராட்டின கிணறு அருகே ஆரம்பித்த இந்தப் பேரணி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை நடைபெற்றது.

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து பேரணி

கன்னியாகுமரி:

நாகர்கோவிலில் இந்திய குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் ஆயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும் கலந்துகொண்டு பதாகைகளை ஏந்தி முழக்கங்கள் எழுப்பினர்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்துப் பேரணி

இதையும் படிங்க:குடியுரிமை திருத்தச் சட்டம்: உத்தரப் பிரதேசத்தில் தொடரும் பெண்கள் போராட்டம்

ABOUT THE AUTHOR

...view details