தமிழ்நாடு

tamil nadu

கர்ப்பிணி காவலர் வாகன விபத்தில் பலி!

By

Published : Oct 12, 2022, 11:45 AM IST

வெள்ளிச்சந்தை காவல்நிலையத்தைச்சேர்ந்த கர்ப்பிணி காவலர் பணி முடிந்து செல்லும் போது வாகன விபத்தில் உயிரிழந்தார்.

கர்ப்பிணி காவலர் வாகன விபத்தில் பலி
கர்ப்பிணி காவலர் வாகன விபத்தில் பலி

கன்னியாகுமரி:வெள்ளிச்சந்தை காவல் நிலையத்தில் பணியாற்றியவர், பெண் காவலர் உஷா (38). இவர் எட்டு மாத கர்ப்பிணி ஆவார். இவர் இன்று காலை பணி முடிந்து, அம்மாண்டிவிளை அருகே கட்டைக்காடு பகுதியில் உள்ள தன் வீட்டிற்குச்சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார்.

பலியான பெண் காவலரின் உடல் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு உடல் கூராய்வுக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:ஆட்சியர் அறை வாயிலில் மேற்கூரை உடைந்து விழுந்தது!!

ABOUT THE AUTHOR

...view details