தமிழ்நாடு

tamil nadu

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் போக்சோவில் கைது!

By

Published : Aug 8, 2020, 8:32 PM IST

கன்னியாகுமரி: 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டர்.

Man arrested for sexually harassing student
Man arrested for sexually harassing student

குமரி மாவட்டத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர், இன்று வீட்டருகே உள்ள தோப்பில் கட்டியிருந்த ஆட்டை அவிழ்த்துவரச் சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் மாணவி வீட்டிற்கு திரும்பாததால், அவரது தாயார் அப்பகுதியில் அச்சிறுமியைத் தேடியுள்ளார்.

இந்நிலையில், சிறுமி அவரது பக்கத்து வீட்டிலிருந்து வெளியே வருவதைப் பார்த்த தாயார், அவரிடம் விசாரித்துள்ளார். அப்போது ஜான்சன் (45) என்பவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறுமி கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து சிறுமியின் தாயார் நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். புகாரைப் பெற்றுக்கொண்ட காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று ஜான்சனை கைது செய்தனர்.

பின்னர் காவல் துறையினர் அவரிடம் நடத்திய விசாரணையில், ஜான்சனுக்கு ஏற்கெனவே திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர் என்பதும், இன்று வீட்டில் தனியாக இருந்த ஜான்சன், அந்த வழியாகச் சென்ற சிறுமியை வீட்டினுள்ளே அழைத்து பாலியல் தொல்லை கொடுத்ததும் தெரியவந்தது.

தொடர்ந்து ஜான்சனைக் கைதுசெய்த காவல் துறையினர், அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details