தமிழ்நாடு

tamil nadu

By

Published : Feb 1, 2020, 11:51 AM IST

ETV Bharat / state

சட்டத்திற்குப் புறம்பாக வீடுகள் விற்பனை: ஆட்சியரிடம் மனு

கன்னியாகுமரி: சட்டத்திற்குப் புறம்பாக வீடுகளை வாங்கியவர்கள்  மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

kanniyakumari collector office
kanniyakumari collector office

கன்னியாகுமரி: மயிலாடி அருகே சுப்பிரமணியபுரம் காலனியில் ஆதிதிராவிடர் நலத் துறையால் வழங்கப்பட்ட வீடுகளை சட்டத்திற்குப் புறம்பாக விலைக்கு வாங்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இது தொடர்பாக, குமரி மாவட்ட ஆதிதிராவிடர் முன்னேற்ற இயக்க நிறுவனத் தலைவர் ஜான் விக்டர்தாஸ், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த புகார் மனுவில், மயிலாடி பேரூராட்சிக்குள்பட்ட பகுதியில் உள்ள சுப்பிரமணியபுரம் காலனியில், ஆதி திராவிடர்களுக்கு 31 வீடுகள் வழங்கப்பட்டன.

ஆதிதிராவிடர்கள் மட்டுமே வசிக்கும் இக்காலனியில், மயிலாடி பகுதியைச் சேர்ந்த ஜெயா, அவரது கணவர் பூபதி ஆகியோர் சட்டத்திற்குப் புறம்பாக, இரு வீடுகளை விலைக்கு வாங்கியுள்ளனர். மேலும் சட்டத்துக்குப் புறம்பாக வாங்கிய இரு வீடுகளையும் ஆதிதிராவிடர் அல்லாத மாற்று சமூகத்தினருக்கு வாடகைக்கு விட்டுள்ளனர்.

காலனி பகுதியில் உள்ள பொது குடிநீர் குழாயிலிருந்து யாரையும் தண்ணீர் எடுக்க அனுமதிக்காததோடு, தங்கள் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு பல்வேறு பிரச்னைகளைத் தொடர்ந்து கொடுத்துவருவதாகத் தெரிவித்துள்ளனர்.

kanniyakumari collector office

இது குறித்து கேட்கும் நபர்களுக்கு எதிராக காவல் நிலையத்தில் புகாரும் அளித்துவருகின்றனர். சட்டத்துக்குப் புறம்பாகச் செயல்படும் கணவன்-மனைவியின் இந்தச் செயலால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் மன உளைச்சலில் உள்ளனர். எனவே இது குறித்து உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

இதையும் படிங்க :கரூரில் பெண்களிடம் அடுத்தடுத்து செயின் பறிப்பு - போலீஸ் விசாரணை

ABOUT THE AUTHOR

...view details