சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் கடல் நடுவே உள்ள பாறையில் 1892ஆம் ஆண்டு டிசம்பர் 25ஆம் தேதி விவேகானந்தர் தியானம் செய்த இடத்தில் விவேகானந்தர் நினைவு மண்டபம் கட்டப்பட்டது. ஆர்எஸ்எஸ் பொதுச்செயலாளராக இருந்த ஏக்நாத் ரானடே ஏற்பாட்டில் கட்டப்பட்ட விவேகானந்தர் மண்டபம் 1970 செப்டம்பர் 2ஆம் தேதி திறக்கப்பட்டது.
இந்நிலையில், விவேகானந்தர் மண்டபத்தின் பொன்விழா செப்டம்பர் 2ஆம் தேதி தொடங்கி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க டிசம்பர் 25ஆம் தேதி இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வருகை தரவுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதற்காக அவர் டெல்லியிலிருந்து விமானம் மூலம் வரும் திருவனந்தபுரம் வந்தடைகிறார். பின்னர் அங்கிருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி அரசினர் விருந்தினர் மாளிகைக்கு வரவுள்ளார்.