தமிழ்நாடு

tamil nadu

'குமரித் தந்தை'யின் 53ஆவது ஆண்டு நினைவு நாள்

By

Published : Jun 1, 2021, 1:39 PM IST

Updated : Jun 1, 2021, 4:15 PM IST

கன்னியாகுமரி: 'குமரித் தந்தை' என்று அழைக்கப்படும் மார்சல் நேசமணியின் 53ஆவது நினைவு நாளையொட்டி அவரது உருவச் சிலைக்கு தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

'குமரித் தந்தை'யின் 53ஆவது ஆண்டு நினைவு நாள்!
'குமரித் தந்தை'யின் 53ஆவது ஆண்டு நினைவு நாள்!

கேரளாவின் திருவிதாங்கூர் சமஸ்தானத்துடன் இணைந்திருந்த கன்னியாகுமரி மாவட்டத்தை தமிழ்நாட்டோடு இணைப்பதற்குப் பல போராட்டங்கள் நடத்தி 1956 நவம்பர் மாதம் குமரி தமிழ்நாட்டோடு இணைக்கப்பட்டது.

இதற்காக அரும்பாடுபட்டவர் நேசமணி. இதனால் இவர் 'குமரித் தந்தை' என்று அழைக்கப்பட்டுவருகிறார். இந்நிலையில் அவரின் 53ஆவது நினைவுநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.

இதை முன்னிட்டு நாகர்கோவில் மார்சல் நேசமணி மணிமண்டபத்தில் உள்ள அவரது உருவச் சிலைக்கு தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அரவிந்த், காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த், அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

'குமரித் தந்தை'யின் 53ஆவது ஆண்டு நினைவு நாள்

இதையும் படிங்க: பிளஸ் டூ தேர்வு எப்போது? - முதலமைச்சர் ஆலோசனை

Last Updated : Jun 1, 2021, 4:15 PM IST

ABOUT THE AUTHOR

...view details