காஞ்சிபுரம் சட்டப்பேரவைத்தொகுதியில், அதிமுக கூட்டணி சார்பில் பாமக வேட்பாளர் மகேஷ்குமார் போட்டியிடுகிறார். அதையொட்டி பல்வேறு பகுதிகளில் அவர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
அவ்வகையில் இன்று (ஏப்.2) காஞ்சிபுரத்தில் உள்ள 51 வார்டுகளில், அவர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அதன் ஓர் பகுதியாக ஏகம்பரநாதர் சந்நிதி தெரு, சாலை தெரு, பூக்கடை சத்திரம், ஒலிமுகமதுபேட்டை உள்ளிட்டப் பல பகுதிகளில் பாமக வேட்பாளர் மகேஷ்குமார், வீதி வீதியாகச் சென்றும் பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி, தேர்தல் அறிக்கையை விளக்கிக்கூறியும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.