தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காஞ்சிபுரத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் - திடீரென தீப்பற்றி எரிந்து சேதம்!

காஞ்சிபுரத்தில் நேற்று இரவு மழை பெய்திருந்த நிலையிலும் வையாவூர் சாலையில் வீட்டின் முன்புறத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆம்னி கார் சந்தேகத்திற்குரிய முறையில் தீப்பற்றி எரிந்தது.

By

Published : Jun 30, 2022, 5:24 PM IST

காஞ்சிபுரத்தில் மர்மமான முறையில் எரிந்த கார்- தீக்கிரையானது
காஞ்சிபுரத்தில் மர்மமான முறையில் எரிந்த கார்- தீக்கிரையானது

காஞ்சிபுரம்பழைய ரயில் நிலையம் அருகே உள்ள வையாவூர் சாலையில் வசிப்பவர், மோகன். இவர் பூக்கடைச் சத்திரம் பகுதியில் பூ வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் மோகன் தனது ஆம்னி காரை தினம்தோறும் வீட்டின் முன்புறத்தில் நிறுத்தி வைப்பது வழக்கம். கடந்த ஒரு வார காலமாக ஆம்னி காரை மோகன் இயக்காமல் இருந்துள்ளார்.

நேற்று இரவு நேரத்தில் காஞ்சிபுரம் சுற்றுவட்டாரப்பகுதி முழுவதும் மழை பெய்தது. இருப்பினும் இன்று காலையில் ஆம்னி கார் திடீரென சந்தேகத்திற்குரிய முறையில் தீப்பற்றி எரியத்தொடங்கியது. கார் தீ பற்றி எரிவதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு மற்றும் மீட்புத்துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.

தகவலின்பேரில் வந்த காஞ்சிபுரம் தீயணைப்புத்துறையினர் ஆம்னி காரில் மளமளவென பற்றி எரிந்த தீயைப் போராடி அணைத்தனர். ஆனால், அதற்குள் ஆம்னி கார் முற்றிலுமாக எரிந்து பயன்படுத்த முடியாத அளவிற்கு தீக்கிரையாகியது.

இந்நிலையில் மழை பெய்தும் சந்தேகத்திற்குரிய முறையில் கார் தீப்பற்றி எரிந்தது குறித்து காஞ்சிபுரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காஞ்சிபுரத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் - திடீரென தீப்பற்றி எரிந்து சேதம்!

இதையும் படிங்க:ஆந்திராவில் சோகம்- ஆட்டோ மீது மின்கம்பி விழுந்ததில் 5 பேர் உடல் கருகி பலி

ABOUT THE AUTHOR

...view details