தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 13, 2020, 10:58 AM IST

Updated : Oct 13, 2020, 11:09 AM IST

ETV Bharat / state

நிலத்தில் உழும்போது தவறிவிழுந்து தனது டிராக்டரிலேயே உடல் நசுங்கி உயிரிழந்த விவசாயி!

கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை அருகே நிலத்தில் டிராக்டர் மூலம் ஏர் உழும் போது தவறி விழுந்த ஓட்டுநர் வயலிலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார்.

farmer died
farmer died

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள நெய்வணை கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன். இவர் தனக்குச் சொந்தமான நிலத்தில் நடவு பயிர் செய்வதற்காக டிராக்டர் மூலம் ஏர் உழுது கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக டிராக்டரில் இருந்து தவறி கீழே விழுந்தார்.

இதில் பின்புற ரொடேட்டரில் சிக்கிக்கொண்டதில் உடல் நசுங்கி நிலத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

Last Updated : Oct 13, 2020, 11:09 AM IST

ABOUT THE AUTHOR

...view details