தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 11, 2020, 5:27 PM IST

ETV Bharat / state

கள்ளக்குறிச்சி அருகே கோயிலுக்கு சென்ற இளைஞர் ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி அருகேயுள்ள சித்தலூர் பெரியாயி கோயிலுக்குச் சென்ற இளைஞர், கோயில் அருகேயுள்ள ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

youth died in kallakurichi river
கள்ளக்குறிச்சி அருகே கோயிலுக்கு சென்ற இளைஞர் ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ், தனது குடும்பத்துடன் சித்தலூர் பெரியாயி கோயிலுக்கு இன்று (டிசம்பக் 12) சென்றுள்ளார். அப்போது, கோயிலுக்கு அருகே இருந்த ஆற்றில் தண்ணீர் வருவதை வேடிக்கை பார்க்கச் சென்ற கோவிந்தராஜின் மகன் மோகன்ராஜ்(18), கால் இடறி ஆற்றில் விழுந்துள்ளார்.

இதைத்தொடர்ந்து, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மோகன்ராஜை மீட்டபோது அவர் உயிரிழந்தது தெரியவந்தது. இந்நிலையில், பொதுமக்கள் ஆம்புலன்ஸுக்கு தகவல் கொடுத்துள்ளனர். ஆனால், இரண்டு மணி நேரம் ஆம்புலன்ஸ் வராததால், வரஞ்சரம் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனர்.

தகவலறிந்து வந்த காவல் துறையினர், மோகன்ராஜின் உடலை உடற்கூராய்விற்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதையும் படிங்க: ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவன் 8 நாள்கள் கழித்து சடலமாக மீட்பு!

ABOUT THE AUTHOR

...view details