கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ், தனது குடும்பத்துடன் சித்தலூர் பெரியாயி கோயிலுக்கு இன்று (டிசம்பக் 12) சென்றுள்ளார். அப்போது, கோயிலுக்கு அருகே இருந்த ஆற்றில் தண்ணீர் வருவதை வேடிக்கை பார்க்கச் சென்ற கோவிந்தராஜின் மகன் மோகன்ராஜ்(18), கால் இடறி ஆற்றில் விழுந்துள்ளார்.
இதைத்தொடர்ந்து, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மோகன்ராஜை மீட்டபோது அவர் உயிரிழந்தது தெரியவந்தது. இந்நிலையில், பொதுமக்கள் ஆம்புலன்ஸுக்கு தகவல் கொடுத்துள்ளனர். ஆனால், இரண்டு மணி நேரம் ஆம்புலன்ஸ் வராததால், வரஞ்சரம் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனர்.