தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சாலை ஓரத்தில் அடிபட்டுக் கிடந்த புள்ளிமான்!

ஈரோடு: சத்தியமங்கலம் ஆசனூர் அருகே சாலை ஓரத்தில் அடிபட்டுக் கிடந்த மானை மீட்டு வனத்துறை அலுவலர்கள் சிகிச்சை அளித்து காட்டில் விட்டனர்.

dear

By

Published : Nov 24, 2019, 9:54 AM IST

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் ஆசனூரில், ஏராளமான மான்கள் உள்ளன. தற்போது அந்தப் பகுதியில் மழை பெய்துள்ளதால் சாலையோரம் துளிர்விடும் புற்களை உண்ண மான்கள் கூட்டம் கூட்டமாக வருகின்றன.

இந்நிலையில், ஆசனூர் வனச்சரகத்தில் ஆசனூரிலிருந்து அரேபாளையம் செல்லும் சாலை ஓரத்தில், மூன்று வயதுள்ள புள்ளிமான் ஒன்று காலில் காயம் ஏற்பட்டு, நடக்க முடியாமல் படுத்துக்கிடந்தது.

மானுக்கு சிகிச்சை அளிக்கும் வனத்துறை அலுவலர்கள்

அப்போது அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் வனத்துறையினருக்குத் தகவல் அளித்தனர். அங்கு வந்த வனத்துறையினர் புள்ளி மானுக்கு காலில் சிகிச்சை அளித்து அப்பகுதியில் உள்ள காட்டில் மானைத் திரும்பவிட்டனர்.

இதையும் படிங்க: பிளாஸ்டிக்கை உண்டதால் 5 ஆண்டுகளில் 497 புள்ளிமான்கள் உயிரிழப்பு!

ABOUT THE AUTHOR

...view details