சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் ஆசனூரில், ஏராளமான மான்கள் உள்ளன. தற்போது அந்தப் பகுதியில் மழை பெய்துள்ளதால் சாலையோரம் துளிர்விடும் புற்களை உண்ண மான்கள் கூட்டம் கூட்டமாக வருகின்றன.
இந்நிலையில், ஆசனூர் வனச்சரகத்தில் ஆசனூரிலிருந்து அரேபாளையம் செல்லும் சாலை ஓரத்தில், மூன்று வயதுள்ள புள்ளிமான் ஒன்று காலில் காயம் ஏற்பட்டு, நடக்க முடியாமல் படுத்துக்கிடந்தது.