தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 12, 2020, 4:20 PM IST

ETV Bharat / state

சத்தியமங்கலம் உயர்மட்ட பாலத்தை விரைவில் கட்டிமுடிக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை

ஈரோடு: மழைக்காலங்களில் காட்டாற்று வெள்ளத்தில் வாகனங்கள் பாதிக்கப்படாமல் இருக்க சத்தியமங்கலத்தில் ரூ.8.66 கோடி செலவில் உயர்மட்ட பாலம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஈரோடு
ஈரோடு

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்திலிருந்து பண்ணாரி சாலை வழியாக தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. புதுவட வள்ளிலிருந்து பண்ணாரி கோயில் வரையிலான அடர்ந்த காட்டுப் பகுதியில், மழைக்காலங்களில் காட்டாற்று வெள்ளம் செல்வதற்காக சிறு பாலங்கள் மட்டுமே நீர்வழிப் போக்கில் உள்ளன. ஆனால் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடும்போது சாலைகளில் மழை வெள்ளம் ஆர்ப்பரித்து செல்கிறது. இதனால் மழைக்காலங்களில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதுடன் விபத்துகள் நடைபெறுகின்றன.

இதையடுத்து வனத்தில் இருந்து வரும் காட்டாற்று வெள்ளம் எளிதாக செல்வதற்கு ஏதுவாக அதிக உயரம் கொண்ட மூன்று உயர்மட்ட பாலங்கள் ரூ.8.66 கோடி செலவில் அமைக்கும் பணி நடந்துவருகிறது. குரங்கு பள்ளம், குய்யனூர் பள்ளம், பண்ணாரி பள்ளம் என மூன்று பள்ளங்களில் குறுக்கே இந்த உயர்மட்ட பாலம் அமைக்கும் பணி துரிதமாக நடைபெற்றுவருகிறது.

உயர்மட்ட பாலம் அமைக்கும் பணி தீவிரம்

இந்த சாலை வழியாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்வதால் மாற்று வழியில் வாகனங்கள் பயணிக்கின்றன. மழை பெய்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும்போது மாற்றுவழி தரைப்பாலத்தில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படும். எனவே உயர்மட்ட பாலத்தை விரைவில் கட்டிமுடிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நெடுஞ்சாலை போக்குவரத்து இளநிலை பொறியாளர் அம்பலவாணன் கூறுகையில், ஓரிரு மாதத்தில் இப்பணி நிறைவடையும் பின்னர் மக்கள் பயன்பாட்டுக்கு விடப்படும் என தெரிவித்தார்.

இதையும் படிங்க: தனியாருக்கு விடப்பட்ட மலை ரயில் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டது!

ABOUT THE AUTHOR

...view details