தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 28, 2019, 4:45 PM IST

ETV Bharat / state

ஜெ., கொண்டுவந்த திட்டங்களை எடுத்துக்கூறி வாக்கு சேகரித்த அமைச்சர்!

ஈரோடு: சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் ஈரோடு அதிமுக வேட்பாளர்  மணிமாறனை ஆதரித்து பரப்புரையில் ஈடுபட்டபோது, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டுவந்த திட்டங்களை மக்களிடம் எடுத்துக்கூறி வாக்கு சேகரித்தார்.

Minister propaganda

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல், 18 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை இடைத்தேர்தல் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் போட்டியிட வேட்பாளர்கள் தாக்கல் செய்த வேட்புமனுக்கள் நேற்று (மார்ச் 27) பரிசீலிக்கப்பட்டு, வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதற்கிடையில், அனைத்துக் கட்சியினரும் தொகுதிவாரியாக பரப்புரையை மேற்கொண்டுள்ளனர்.

ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் மணிமாறனை ஆதரித்து சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் இன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அமைச்சர் கருப்பண்ணன் ஈரோட்டில் பரப்புரை

ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட வண்டியூரான் கோயில், வைராபாளையம், கிருஷ்ணம்பாளையம், அசோகபுரம், அக்ரஹாரம் உள்ளிட்ட பகுதிகளில் வாகன பரப்புரை மேற்கொண்டார்.

பரப்புரையின்போது முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டுவந்த நெசவாளர் திட்டங்கள், மகளிருக்கான திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் எடுத்துக்கூறி கே.சி.கருப்பணன் வாக்கு சேகரித்தார். இந்த பரப்புரையில் பாரதிய ஜனதா, தேமுதிக, தமாகா உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details