தமிழ்நாடு

tamil nadu

ஈரோடு ஆவின் பால் பண்ணையில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆய்வு

By

Published : May 3, 2022, 9:42 AM IST

Updated : May 3, 2022, 12:40 PM IST

ஈரோட்டில் உள்ள ஆவின் நிறுவனத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்(ஏப் 02)ஆய்வு மேற்கொண்டார்.

ஈரோடு ஆவின் பால் பண்ணையில் மத்திய மந்திரி எல்.முருகன் ஆய்வு
ஈரோடு ஆவின் பால் பண்ணையில் மத்திய மந்திரி எல்.முருகன் ஆய்வு

ஈரோடு:சித்தோட்டில் அமைந்துள்ள ஆவின் நிறுவனத்தில் மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை, மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் ஆய்வு மேற்கொண்டார். இதில் ஆவின் நிறுவனத்திலுள்ள பால் குளிரூட்டும் பகுதி ,பால்கோவா , வெண்ணெய் ,பால்பவுடர் உள்ளிட்ட ஆவின் பொருட்கள் உற்பத்தி செய்வதை அவர் பார்வையிட்டார்.

மேலும் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களிலிருந்து பால் கொள்முதல் செய்து குறித்தும் , சுகாதார முறையில் பால் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுவது குறித்தும் விற்பனை குறித்தும் பால் வளத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனையின் போது கேட்டறிந்தார்.

ஈரோடு ஆவின் பால் பண்ணையில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆய்வு

இந்த ஆய்வின் போது மொடக்குறிச்சி பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதி , ஈரோடு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ண்ணுண்ணி , பால்வளத்துறை ஆணையர் பிரகாஷ் மற்றும் உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

இதையும் படிங்க:ஆவின் பாலின் விலையை குறைத்து விற்பனை செய்த ரிலையன்ஸ் ஸ்மார்ட் நிறுவனம்

Last Updated : May 3, 2022, 12:40 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details